Posts

அவனின் கழிவறை

Image
அவனின் கழிவறை                               சாரதி     .     ஆத்திர அவசரத்துக்கு வந்தே தொலையாது. அடுத்து அடுத்து வேலை இருக்கு.   இதுல போய் உட்கார்ந்திட்டு. இவ்வளவுக்கும் ரெண்டு தடவை டீ குடிச்சாச்சு.   நாலு தடவை வாக்கிங் போயாச்சு.   எல்லாம் நடந்த பிறகும் சின்ன அசைவு கூட இல்லை.   நமக்கு எந்த பிரச்சனைதான் அசையுது.   எல்லாம் அப்படி அப்படி நிற்கிறது.   சரி ஒவ்வொரு பிரச்சனையாகவே முடியட்டும்.   இப்பொழுது முக்கியமானது, சின்ன பிள்ளைக்கு காலேஜ் பீஸ் கட்டணும்.   அது முடிஞ்சா கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். பணத்தை ஓரளவுக்கு பிறட்டியாச்சி.   ஒரு நாற்பதாயிரம் ரூபாய் கிடைக்க மாட்டேங்குது.   என்னன்னு தெரியல.   இப்படி இருந்ததேயில்லை. கேட்டவங்கல்லாம் கையை விரிச்சிட்டாங்க.   காலையில் நாராயணன் வரச்சொல்லியிருக்கான்.   அவனிடம் இது வரை கேட்டதே இல்லை. அவனிடம் கேட்பதற...

கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பிவெளி

Image
கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பிவெளி                                  சாரதி .   .   சந்தானகிருஷ்ணனிடமிருந்த கடைசிப்பொருள் அந்த கண்ணாடிதான்.   அவன் தாத்தாவின் அய்யா சிவராமகிருஷ்ணன்தான் கடலோடியாய் அலையும்போது சீன மாலுமி ஒருவர் தனக்கு அவரின் அன்பின் சாட்சியாக கொடுத்ததாகக் குறிப்பு எழுதி ஒரு விசித்திரமான தோல் பையில், பழைய கிராம்போன் பெட்டிக்கடியில் வைத்திருந்தார். இவையெல்லாம், வெகுகாலமாக திறக்கப்படாத அறையில் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு கிடந்தது. அதை எதற்காக எடுத்தார் என்று சந்தானகிருஷ்ணனுக்கே தெரியாது. ஒரு வேளை அவர் காதலியின் நீண்டகால நினைவிலிருந்து தப்பிக்க ஏதாவது ஒரு வழியை தேடுகிறாரோ… என்னவோ?. சந்தானகிருஷ்ணனுக்கு இப்பொழுது வயது அறுபது இருக்கும்.   அவர் காதலித்த சிறிது காலத்திலேயே, அவள் விபத்தில் இறந்து விட்டாள். அதன் பின் திருமணம் செய்து கொள்ளாமலே தனி ஆளாகவே   இவ்வளவு காலங்கள் கழித்து விட்டார்....

இணக்கம்

இணக்கம்                                                                                              சாரதி      சாந்தாவுக்கு திருமணம் உறுதியாகிவிட்டது. அவள் அம்மா அதற்காக வேண்டாத தெய்வமில்லை. போகாத கோயில் இல்லை. சாந்தா பல நேரம் வயிற்று வலி, ரத்தப்போக்குன்னு வீட்டில் முடங்கி விடுவாள். சிலசமயம் கண்முழி மேலேறிக்கொண்டு மயங்கியே விழுந்து விடுவாள். இது விசயமாக கைப்பக்குவத்திலிருந்து, நல்ல லேடி டாக்டர் வரைக்கும் பார்த்தாகிவிட்டது.   எல்லாரும் சொன்ன ஒரே பதில் அவளுக்கு கல்யாணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும். அதைத்தான் அவள்...