இணக்கம்
இணக்கம் சாரதி சாந்தாவுக்கு திருமணம் உறுதியாகிவிட்டது. அவள் அம்மா அதற்காக வேண்டாத தெய்வமில்லை. போகாத கோயில் இல்லை. சாந்தா பல நேரம் வயிற்று வலி, ரத்தப்போக்குன்னு வீட்டில் முடங்கி விடுவாள். சிலசமயம் கண்முழி மேலேறிக்கொண்டு மயங்கியே விழுந்து விடுவாள். இது விசயமாக கைப்பக்குவத்திலிருந்து, நல்ல லேடி டாக்டர் வரைக்கும் பார்த்தாகிவிட்டது. எல்லாரும் சொன்ன ஒரே பதில் அவளுக்கு கல்யாணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும். அதைத்தான் அவள் பாட்டியும் சொன்னாள். சாந்தாவிற்கு திருமணமானால் தாம்பத்யத்தில் வயிறு வலி, ரத்தப்போக்கு, தீட்டு எல்லாம் சரியாகி விடும் என்று அவள் குடும்பமே முடிவெடுத்தது. சாந்தாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளெல்லாம் விறுவிறுப்பானது. அன்றைக்குத்தான் திருமணம். ஆனால், அன்று காலையிலிருந்தே சாந்தாவுக்கு காய்ச்சல், பயம், பதட்டம். அவள் அம்மா, பாட்டி, வேணி அக்கா, சிநேகிதி கல்பனா எல்லாருமே அவளருகிலிருந்து பயத்தையும் பதட்டத்தையும் போக்க பேசி தைரியமாக்கி கொண்டேயிருந்தா